2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் (TNTRB) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பணி: Post Graduate Assistants / Physical Education Directors Grade – I, Computer instructor Grade-1

காலியிடங்கள்: 2207*

பாட வாரியாக காலிப்பணியிடங்கள்: தமிழ் – 271, ஆங்கிலம் –192, கணிதவியல் 114, இயற்பியியல் –97, வேதியியல் 191, விலங்கியியல் 109, தாவரவியல் – 92, பொருளாதாரவியல் 289, வணிகவியல் 313, வரலாறு 115, புவியியல் 12, அரசியல் அறிவியியல் 14, வீட்டு அறிவியியல் 3, இந்திய கலாசாரம் 3, உயிா் வேதியியல் 1, உடற்கல்வி இயக்குநா் (நிலை- 1) 39, கணினி பயிற்றுவிப்பாளா் (நிலை-1) 44.

சம்பளம்: மாதம் ரூ.36,900 -1,16,600

வயது வரம்பு:  ஜூலை 2021-ஆம் தேதி 40 வயதினைக் கடந்தவா்கள் விண்ணப்பிக்க முடியாது. ஆனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கூடுதலாக ஐந்து ஆண்டுகள் தளா்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 45 வயது வரை விண்ணப்பிக்க முடியும்.

தகுதி:    தமிழ், ஆங்கிலம், புவியியல், வரலாறு, இந்திய கலாசாரம், கணிதவியல், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் அறிவியல், உயிர்வேதியியல், தாவரவியல், வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், வீட்டு அறிவியியல், விலங்கியல், கணினியியல் போன்ற பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கிகளின் பற்று, வரவு அட்டைகள், ஆன்லைனில் செலுத்தலாம்

விண்ணப்பிக்கும் முறை:  www.trb.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு,  சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்  மூன்று மணி நேரம் நடைபெறும் எழுத்துத் தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதி, 50 சதவீத மதிப்பெண் பெறுபவா்கள் தகுதி பெற்றவா்கள் ஆவா். எஸ்.சி, எஸ்.சி.ஏ பிரிவினா் 45 சதவீத மதிப்பெண்களும், எஸ்.டி பிரிவினா் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றால் தகுதி பெறுவா். ஆசிரியா்கள் நியமனத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறை அரசு விதிகளின்படி பின்பற்றப்படும். தமிழ் வழி கல்வி பயின்றவர்கள் அதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2021 நவம்பர் 13,14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  செப்டம்பர் 16ம் தேதி முதல்  அக்டோபர் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.